Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2022 16:30:11 Hours

புதிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்பு

பிரிகேடியர் கிரிஷாந்த பீரிஸ் அவர்கள் அண்மையில் இராணுவத் தலைமையகத்தில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பணிப்பாளராக அலுவலகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

பல அதிகாரிகள் முன்னிலையில், புதிய மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பாளர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நடைபெற்ற நிகழ்வின் போது மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகத்தின் பல பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

அவர் தற்போதைய நியமனத்திற்கு முன்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதியாக கடமையாற்றியுள்ளார். மேலும் அண்மையில் வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் ரசிக குமார அவர்களுக்குப் பதிலாக இவர் இந்த நியமனத்திற்கு பதவியேற்றுள்ளார்.