22nd September 2022 16:27:20 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 57 வது படைப்பிரிவின் 573 வது பிரிகேட் தலைமையகத்தின் கீழுள்ள 9 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் அண்மையில் மாங்குளத்திலுள்ள சண்முகரத்தினம் ஆரம்பப் பாடசாலையிலுள்ள வரிய மாணவர்களுக்கு பாடசாலை காலணிகள், சீருடைகள் மற்றும் பாடசாலை பைகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அனுசரணையாளரான திரு.ரொஹான் அப்புஹாமி, ரோஷிகா டி சில்வா, ஹிமந்த டி சில்வா மற்றும் திரு. ஹெர்பர்ட் டி சில்வா ஆகியோர் இணைந்து வழங்கிய இந்த நிவாரணப் பொருட்கள் 49 வரிய பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
573 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரமித் பிரசன்ன அவர்களின் அழைப்பின் பேரில் 57 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் அவர்கள் பிரதம அதிதியாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் பிரதிநிதி நன்கொடையாளர்களும் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.