Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2022 16:33:14 Hours

சீன பாதுகாப்பு இணைப்பாளர் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையிலுள்ள சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் சிரேஷ்ட கேணல் வான் டோங், அவரது மனைவி கேணல் காவோ பின் ஆகியோர் புதன்கிழமை (21) கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களை அப்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவர்களை வரவேற்ற மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை இராணுவத்திற்கு சீன இராணுவத்தினால் விரிவுபடுத்தப்பட்ட புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக தெரிவித்ததுடன் எதிர்காலத்தில் அத்தகைய உறவுகளை மேலும் மேம்படுத்த தனது ஆர்வத்தினை வெளிப்படுத்தினார்.

இந்த மரியாதை நிமித்தமான கலந்துரையாடலின் முடிவில், கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் அவர்களுக்கிடையில் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மேலும் சிரேஷ்ட கேணல் வான் டோங் அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் அதிதிகள் புத்தகத்தில் தனது கருத்துக்களையும் பதிவு செய்தார்.

இந்த நிகழ்வில் சீன பாதுகாப்பு இணைப்பாளரின் உதவி அதிகாரியும் இணைந்திருந்தார். கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.