Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd August 2022 18:38:32 Hours

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் இராணுவத் தளபதியை சந்திப்பு

கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளரான பிரித்தானிய இராணுவத்தின் கேணல் போல் கிளேட்டன் (3) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் ஆகிய இருவரும் இரு நாடுகளின் ஆயுதப் படைகளுக்கிடையில் நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வெவ்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் இரு நாட்டு ஆயுதப்படைகளின் பங்கேற்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இந்சந்திப்பின் இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தும் வகையில் பிரித்தானிய பாதுகாப்பு இணைப்பாளருக்கு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதோட்ட அவர்களும் அன்றைய சந்திப்பில் கலந்துகொண்டார்.