Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th July 2022 18:24:46 Hours

இராணுவத் தளபதி ஓய்வுபெறும் அதிகாரியின் பணிகளை நினைவு கூர்ந்தார்

இராணுவத்தில் 35 வருடங்களுக்கு மேலாக முன்மாதிரியாக சேவையாற்றி ஓய்வுபெற்றுச் செல்லும் காலாட்படை பணிப்பக பணிப்பாளரான கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் டம்மி ஹேவகே அவர்கள், தனது குடும்ப உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (28) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை சந்தித்தார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவையைப் பாராட்டிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள், கடந்த காலத்தில் பல்வேறு பதவிகளில் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதை மிகவும் பாராட்டினார்.

2009 மே மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிராக உண்மையான காலாட்படை வீரராக அவரினால் ஆற்றப்பட்ட விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் அச்சமற்ற பணிகள் மற்றும் போரின் வெற்றிக் கதையில் அவரது மறக்க முடியாத பங்களிப்பினை அவர் நினைவு கூர்ந்தார். " எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதென்பது உண்மையான காலாட்படை வீரரால் மட்டுமே சாதிக்கப்படும் ஒரு துணிச்சலான செயல் என்பதால் தற்காலிக அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளின் அந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் தைரியமாக முன்னோக்கிச் சென்று சிறப்புப் படையில் சேர்ந்தீர்கள்" என்று இராணுவத் தளபதி சந்திப்பின் போது தெரிவித்தார்.

கூடுதலாக, இராணுவத்தில் மிகவும் திறமையான பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட விதம் தொடர்பாகவும் இராணுவத் தளபதி மிகவும் பாராட்டினார் மற்றும் அவரது எதிர்கால முயற்சிகள் மற்றும் திட்டங்கள் குறித்து சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

கஜபா படையணியை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி தனது பதவிக் காலத்தில் இராணுவ தலைமையகத்தில் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் பல முக்கிய கட்டளை, பதவி நிலை மற்றும் பயிற்றுவிப்பாளர் போன்ற நியமனங்களை வகித்துள்ளார். கலந்துரையாடலின் போது இராணுவத் தளபதி, நிகழ்வில் கலந்துகொண்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் வழங்கிய உத்வேகத்திற்கும் தைரியத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தளபதியின் வழிகாட்டல் மற்றும் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தளபதியிடமிருந்து பெற்ற ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

கலந்துரையாடலின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பாராட்டுக்கான அடையாளமாக ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் டம்மி ஹேவகே அவர்களுக்கு நினைவுச் சின்னத்தையும் அவரது குடும்பத்திற்கு சிறப்பு பரிசு பொதியையும் வழங்கினார்.