02nd May 2022 23:48:17 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் தலைப் பிறைக் கண்டு செவ்வாய்க்கிழமை (3) ரமழான் பெருநாளை கொண்டாடும் இலங்கையின் அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும், இராணுவம் , கடற்டை , விமானப் படைகளின் (முப்படை) அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் தனது ஈதுல் பித்தர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார். மேலும் தனது வாழ்த்துச் செய்தியில் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகள் கொண்டாட்டங்களை மட்டுப்படுத்திருந்தாலும் உங்களுக்கு சவால்களை எதிர் கொள்ளும் பலம், ஆரோக்கியம் ஆகியவற்றுடன் சாந்தி, சமாதானமும் நிறைந்த ஒளிமயமான நல்வாழ்வு கிட்டும் இனிய ரமழானாக அமைய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இனிய ரமழான் வாழ்த்துக்கள்!