Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th March 2021 22:20:35 Hours

பாகிஸ்தானின் தேசிய தினத்தை வண்ணமயமாக்கிய இலங்கை இராணுவ பரசூட் வீரர்கள்

பாக்கிஸ்தானின் தேசிய தின நிகழ்வுகள் இஸ்லாமாபாத்தில் மார்ச் 25 ஆம் திகதி இடம்பெற்ற போது, அந்நாட்டு ஆயுதப்படைகளுடன் இலங்கை இராணுவத்தின் விஷேட படை பரசூட் குழுவினர் கைதட்டல்கள், ஆரவாரங்களுக்கு மத்தியில் சுமார் 12,000 அடி உயரத்தில் இருந்து குதித்து நிகழ்வை வண்ணமயமாக்கினர்.

பாராசூட் வீரர்களான மேஜர் ஜே.எச்.எஸ். புஷ்பகுமார, மேஜர் எச்.எம்.எல்.பி ஹேரத், சார்ஜென் ஐ.ஜி.ஏ.சமன்குமார, கோப்ரல் பி.ஏ.பி.ஜே.ஜே.பி பண்டார, டபிள்யூ.வி.கே.ஜேயசூரிய ஆகியோர் இலங்கை இராணுவத்தை பிரதிநிதிதுவப்படுத்தி இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

பாகிஸ்தானின் தேசிய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், அன்று அதிகாலை இராணுவ மற்றும் சிவில் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகளும் இடம்பெற்றன. அத்தோடு அங்குள்ள சகல அரசாங்க, தனியார் கட்டிடங்களும் தேசிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. trace affiliate link | Nike nike dunk high supreme polka dot background , Gov