21st March 2021 18:23:02 Hours
கதிர்காமத்தில் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய திட்டமான ‘சுரக்கிமு கங்கா’ திட்டத்திற்கு இணையாக, இலங்கை ஆறுகளை பாதுகாத்தல் மற்றும் சுத்தப்படுத்தல் திட்டம் வட மாகாணத்தில்கிளிநொச்சியில் திங்கட்கிழமை (22) கனகராயன் ஆற்றுப் படுகைக்கு அருகே ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு மாகாணமத்திய சுற்றாடல் அதிகார சபையின் அழைப்பின் பேரில் கிளிநொச்சிபாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிமேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி முன்னரங்குப் பாதுகாப்பு பிரதேச தளபதிமேஜர் ஜெனரல் பியால் நானாயகரவசம் ஆகியோர் திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்லஸ், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் ராமநாதன், சிரேஸ்ட அரச அதிகாரிகள், முப்படை சேவை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். jordan release date | Mens Flynit Trainers