Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th March 2021 11:30:26 Hours

பொது மக்களின் உயிர் காக்க கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியினால் இரத்த தானம்

கிளிநொச்சி இரத்த வங்கியின் வேண்டுகோளுக்கு விரைவாக பதிலளிக்கும் நிமித்தம் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய படையினரால் வைத்தியசாலைகளில் உள்ள நோயாளிகளின் நலனுக்காக வியாழக்கிழமை (18) இரத்த தானம் வழங்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ ஊழியர்களின் வழிகாட்டுதலின் பேரில் கிளிநொச்சி படையினரால் இராணுவ முதன்மை வைத்தியசாலையில் இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உறுப்பு மாற்று நிபுணர் யசோபா திலகரத்ன,வைத்தியர்களான பி. ஐ குமநாயக்க, என். விஜயதிலகே மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை மருத்துவக் குழு, இந்த திட்டத்தை நடத்த முழுமையாக உதவினர்.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க உட்பட பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் , சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி பிரதேசத்தில் வாழும் தமிழ் பொதுமக்களும் இரத்த தானம் செய்தனர்.

பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் தீபால் ஹதுருசிங்க மற்றும் சிவில் விவகாரங்களுக்கான பிரதம ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் கேணல் லால் கித்சிரி ஆகியோர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து வெற்றிபெற முழு ஆதரவையும் வழங்கினர்.

திட்டத்தின் முடிவில், இந்த உயிர்காக்கும் மனிதாபிமான திட்டத்திற்கு இராணுவம் அளித்த தாராள மனப்பான்மையையும் ஆதரவையும் வைத்திய குழு மிகவும் பாராட்டியது. Nike air jordan Sneakers | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ