Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th March 2021 21:07:18 Hours

மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்களின் சேவைக்கு இராணுவ தளபதி பாராட்டு

முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றிய முன்னாள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதியும், கெமுனு ஹேவா படையணியின் சிறந்த அதிகாரிகளில் ஒருவருமான மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று செல்லும் முன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை செவ்வாய்க்கிழமை 16 ஆம் திகதி இராணுவ தளபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் நினைவுகள் மற்றும் ஓய்வு பெற்று செல்லும் மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க அவர்கள் இராணுவத்தில் குறிப்பாக கெமுனு ஹேவா படையணியில் வகித்த பல முக்கிய நியமனங்கள் தொடர்பாக நினைவுப்படுத்தினார். அவராற்றிய சேவை தொழில்முறை திறன்கள் அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து நற் பணிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஓய்வு பெற்றுசெல்லும் சிரேஷ்ட அதிகாரி தனது தளபதியின் விருப்பத்திற்கும், சிந்தனைக்கும் நன்றி தெரிவித்ததோடு, தனது கடமைகளை நிறைவேற்றுவதில் இராணுவத் தலைவரிடமிருந்து பெற்ற ஊக்கத்தைப் பற்றி சினைவு கூர்ந்தார். சந்திப்பின் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு பெற்றவருக்கு பாராட்டு மற்றும் பாராட்டுகளின் அடையாளமாக சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். jordan Sneakers | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov