Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th August 2020 11:00:02 Hours

நன்கொடையாளர்களுடன் யாழ் படையினரால் குறைந்த வருமானம் குடும்பத்திற்கு புதிய வீடு வழங்கல்

யாழ் மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள குறைந்த வருமானத்தில் வாழும் குடும்பமொன்றுக்கு யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரியாவின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதனை தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மனிதவள ஆதரவுடன் புதிய வீடு கட்டப்பட்டது.

பல திட்டங்களுக்கு நன்கொடையாளர்களாக இருந்த திரு குமார வீரசூரியாவும் அவரது நெருங்கிய நண்பர்கள் தங்களது தாராள மனப்பான்மையின் பயனாக மானிப்பாய் திருமதி நந்தினி ரதீஸ்வரனுக்கு புதிய வீட்டிற்கான மூலப் பொருட்களை வாங்குவதற்கான நிதி வழங்கப்பட்டது.

இவ்வாறு கட்டப்பட்ட புதிய வீடு 06 ஆம் திகதி வியாழக்கிழமை பயனாளிக்கு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி அவர்களால் இவ் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய வீட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் நன்கொடையாளர்கள், அதிகாரிகள், படையினர், குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் பிரதேச பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இக் கட்டுமான பணிகள் 51 ஆவது படைப்பிரிவின் தளபதி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 511 ஆவது படையின் 15 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் 51 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க 511 ஆவது படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் மற்றும் நலம் விரும்பிகள் பலர் கலந்துக்கொண்டனர். buy footwear | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ