07th January 2020 21:57:43 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்து நிறைவு செய்த ‘தச பல இராவன’ நுட்ப தற்பாதுகாப்பு கலைப் பயிற்சிகளின் நிறைவு நிகழ்வானது இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.
இலக்கம் - 2 கீழ் இந்த பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தற்பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கும் ரிடிகல சிங்கக்கார பரபுரே கலாகீரத்தி கலாவிபூஷன திரு தேவிந்த லக்சிறி ரணசிங்க அவர்களால் இந்த பயிற்சிகள் கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையக வளாகத்தினுள் மேற்கொள்ளப்பட்டன.
பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் வருகை தந்து பயிற்சிகளில் சிறந்த தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்து கௌரவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் 57, 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிர்வாக பிரதானி பிரிகேடியர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். bridge media | Air Jordan