03rd June 2019 16:10:55 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி பணியாளர்களின் பங்களிப்புடன் இணைந்து இடம்பெற்ற பாதுகாப்பு ஒன்றுகூடல் கூட்டமானது கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இம் மாதம் (2) ஆம் திகதி இடம்பெற்றது.
இந்த கூட்டத்தில் 4500 க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன், நிவாரண உதவியாளர்களிடமிருந்து அந்த நிவாரணங்களை விநியோகிப்பதற்காக பொறுப்பாக இருந்த சில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய , 57 ஆவது படைத் தளபதி மற்றும் பொலிஸார் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.trace affiliate link | Nike Shoes