Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th December 2018 21:40:20 Hours

இராணுவத்தினர் அனர்த்த பணிகளில் ஈடுபாடு

முல்லைத்தீவு புளியமுனை பிரதேசங்களில் ஏற்பட்ட வெ ள்ளப் பெருக்கின் நிமித்தம் அப்பிரதேசத்தில் 59 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 19 ஆவது கெமுனு காலாட் படையணியினர் அனர்த்த பணிகளில் (22) ஆம் திகதி சனிக் கிழமை ஈடுபட்டனர்.

மேலும் 68 ஆவது படைப் பிரிவின் கீழ் இருக்கும் 4 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியினால் மரதமடுகுளம் அனைக்கட்டில் இருந்து வீழ்ந்த நீர்வீழ்ச்சியை கட்டுப்படுத்தும் முகமாக 1000 மண்பைகளை போட்டு இந்த அனைக்கட்டு கசிவுகள் ஏற்படாதவாறு தடுக்கும் பணிகளை (22) ஆம் திகதி சனிக் கிழமை மேற்கொண்டனர்.

புதுக்குடியிருப்பு முள்ளியவாய்க்கால் பிரதேசங்களில் பாரிய மரம் முறிந்து வீதிகளில் போக்குவரத்து ஸதம்பீதமடைந்திருந்தது. அச்சமயத்தில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் அவ்விடத்திற்கு சென்று வீதியிலிருந்து மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். Authentic Sneakers | Nike sneakers