Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th November 2018 08:09:10 Hours

கண்டியில் ஓயவு பெற்ற இராணுவ சேவை படையினர் சங்கத்தினரால் நாட்டிட்காக உயர் நீத்த இராணுவப் படையினரின் ஞாபகார்த்த நிகழ்வு

கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் கடந்த (11) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை உயர் நீத்த இராணுவப் படையினரின் ஞாபகார்த்த தினம் இடம் பெற்றதைபோல், கண்டியில் ஓய்வு பெற்ற இராணுவ சேவை படையினர் சங்கத்தினரால் கண்டி நகரத்தில் அமைந்துள்ள ஜேசப் டி சில்வா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள நாட்டிட்காக உயர் நீத்த இராணுவத்தினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதான அதிதியாக மத்திய மாகண ஆளுநர் கௌரவ பி.பி திசாநாயக அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இலங்கை இராணுவ பேண்ட் வாத்திய குழு மற்றும் இராணுவ அணிவகுப்பு குழு, ஓய்வு பெற்ற முப்படையினரும், பொலிஸ் படையினரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். jordan release date | Air Jordan Release Dates 2020