Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2018 22:55:11 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினர் வெள்ள நிவாரப்பணிகளில் ஈடுபாடு

கிழக்கு பாதுகாப்பு படையின் 12ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஷாந்த தகாநாயக்க அவர்களின் தலைமையிலான படையினர் கிரான் புலிபாஞ்சகல் பிரதேசத்தில் வெள்ள நீர் காரணமாக அவ்வீதியினுhடாக பயணிப்பதற்கான வசதிகளை இராணுவத்தினர் கடந்த சனிக் கிழமை (10) காலை மேற்கொண்டனர்.

மேலும் தொடர் மழை காரணமாக 1100 மக்கள் இடம் பெயந்து காணப்படுவதுடன் 800பேர் தமது போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வதற்கு சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இதன் போது படையினர் கிரான் புலிபாஞ்சகல் பிரதேசத்தில் இதற்கான பணிகளை மேற்கொண்டனர். இதன்;போது பெரியவெட்டுவான் பாலம் போன்றனவூம் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கிழக்கு பாதுகாப்பு படையின் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பனான்வெல அவர்களின் வழிகாட்டலின் கீழ் வம்மிவட்டுவான் தட்டமனை மற்றும் கிரான் போன்ற பிரதேசங்களில் பொதுமக்களுக்கான சுகாதார வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் வம்மிவட்டுவான் பிரதேசத்தில் கிட்டத் தட்ட 30பேர் வைரஸ் காய்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இவர்கள் 233ஆவது படைப் பிரிவிற்கு மேலதிக மருத்துவ வசதிகளைப் பெறும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை 233ஆவது படைப் பிரிவினர் நுளம்பு வலை படுக்கை விரிப்புகள் சிறு மெத்தைகள் மற்றம் மதிய உணவூப் பொதிகள் அத்துடன் அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் போன்றனவூம் வழங்கப்பட்டன. Asics shoes | Air Jordan Release Dates 2020