17th October 2018 13:45:09 Hours
முப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வொன்று பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தினுள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அவர்களின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
முப்படையினருக்கு இதன்போது பலா, நெல்லி, நாக, தென்னை மற்றும் கும்புக் ஆகிய மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர மற்றும் இராணுவ தொடர்பாடல் அதிகாரி மேஜர் ஜெனரல் டீ.ஏ.ஆர் ரணவக அவர்கள் கலந்து கொண்டனர். latest jordan Sneakers | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ