Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th October 2018 13:39:55 Hours

கஜபா படையணியின் 35 ஆவது ஆண்டு பூர்த்தி விழா

இலங்கை இராணுவத்தின் கஜபா படையணியின் 35 ஆவது ஆண்டு பூர்த்தி விழா அநுராபுர சாலியபுர பிரதேசத்திலுள்ள கஜபா படையணி தலைமையகத்தில் (14) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றன.

கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இந்த ஆண்டு பூர்த்தி நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து சிறப்பித்தார்.

படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை கஜபா படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் ஹரீந்திர பீரிஸ் அவர்கள் வரவேற்றார்.

பின்னர் படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி மரியாதைகள் செலுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து படைத் தலைமையக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் காலஞ் சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்களது நினைவு தூபிக்கு சென்று படைத் தளபதி அஞ்சலியை செலுத்தினார்.

அதன் பின்பு கஜபா படைத் தலைமையகத்தினுள் அமைத்திருக்கும் இராணுவ நினைவு தூபிக்கு சென்று இந்த நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலியையும் செலுத்தினார்.

கஜபா படையணி 1983 ஆம் ஆண்டு 14 ஆம் திகதி ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த படையணியில் 171 அதிகாரிகளும், 4079 படை வீரர்களும் தற்பொழுது கடமை வகிக்கின்றனர். Sports Shoes | AIR MAX PLUS