01st October 2018 13:34:35 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான சித்திரப் போட்டிகளை உயர் அதிகாரிகளின் தலைமையில் நிகழ்த்தியுள்ளது.
அந்த வகையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறார்களின் திறமைகளை வெளிக்காட்டும் ஓர் செயற்பாடாக இது அமைந்துள்ளது. இந் நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரர் தர்ஷன ஹெட்டியராச்சியவர்கள் கலந்து கொண்டதுடன் கைத்தடியிலுள்ள சாந்தி முதியோர் இல்லத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (28) இந் நிகழ்வூகள் மிகவூம் கோலாகலமாக இடம் பெற்று நிறைவுற்றது.
இதன் போது இராணுவ கிளைப்போ பேண்ட் வாத்தியக் குழுக்கள் இசை நிகழ்ச்சிகளை நிகழத்தியதோடு தமிழ் சிங்களப் பாடல்களும் இதன் போது பாடப்பட்டு சிறு பந்தாட்ட விளையாட்டு கேளிக்கை விணோதப் போட்டிகளும் இடம் பெற்றது. இதன் போது இராணுவத்தினர் சிற்றுண்டிகளை வழங்கி வைத்தனர். வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் வழங்கி வைத்தது.
அந்த வகையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகமானது ஒக்டோபர் 1ஆம் திகதியன்று சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடும் நோக்கில் இவ் ஒழுங்குகள் அமையப் பெற்றது. கடந்த ஞாயிற்றுக் கிழமை பழைய சிறுவர் பூங்காவில் (30) இந் நிகழ்வூகள் இடம் பெற்றது.
இதன்போது. 150 ற்கு மேற்பட்ட சிறார்கள் பங்கேற்றனர். சிற்றுண்டிகள் போன்றன இராணுவத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக உயர் அதிகாரிகள் மற்றும் பல படையினர் இந் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் 51ஆவது படைப் பிரிவினரும் கலந்து கொண்டனர் Best jordan Sneakers | Nike Shoes