30th September 2018 00:06:24 Hours
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைப் பிரிவின் 653 மற்றும் 651ஆவது படைப் பிரிவினர் இணைந்து சமூக நலத் திட்டங்களை செப்டெம்பர் மாதம் 26-27 வரை முதல் மேற் கொண்டனர்.
அந்த வகையில் 651ஆவது படைப் பிரிவின் 19ஆவது இலங்கை இலேசாயூத காலாட் படையணியினர் 10ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையணியினர் மற்றும் 21 (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணியினர். இச் சிரமதானப் பணிகளை கல்விலான் அரச தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் மேற்கொண்டிருந்தனர் மேலும் 653ஆவது படையினர் சிரமதானப் பணிகளை வுணிக்குளம் பிரதேசத்தில் மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவக அவர்களின் வழிகாட்டலின் கீழ் 65ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களின் கண்காணிப்பில் 200ற்கும் மேற்பட்ட படையினர் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு இச் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.Nike air jordan Sneakers | Nike SB