07th September 2018 21:08:56 Hours
ஹப்புத்தளை மாநகர சபை அதிகாரியின் வேண்டுக்கோளுக்கிணங்க மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆலோசனைக்கமைய (06) ஆம் திகதி வியாழக் கிழமை ஹப்புத்தளை நகர பிரதேசத்திற்குற்பட்ட இடங்களை சுத்திகரிக்கும் நிமித்தம் இராணுவ அதிகாரியொறுவர் உட்பட 20 இராணுவ வீரர்கள் சிரமதான பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
இச் சிரமதான பணிகளுக்கு அரச ஊழியர்கள், அரசு சாரா நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் மாநகர வாசிகள் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
இந்த சிரமதான பணிகளில் இணைந்து கொண்ட இராணுவத்தினருக்கு ஹப்புத்தளை மாநகர சபை அதிகாரிகள் உட்பட அனைத்து அங்கத்தவர்களும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். latest Nike release | シューズ