14th August 2018 11:02:27 Hours
இம்முறை முப்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ‘ரணவிரு ரியல் ஸ்டார் 5’ போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடத்தைப் பெற்ற இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்பாடியர் சம்பத் ஶ்ரீ பலன்சூரிய அவர்களுக்கு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஹொரனையிலுள்ள மதுரவல பிரபுத்தகமயில் புதிய வீடொன்று பரிசாக (13) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டன.
இந்த போட்டியில் இறுதிச் சுற்றில் 35 முப்படையைச் சேர்ந்த சிறந்த பாடகர்களுக்கு இடையில் இறுக்கமான நிலையில் இப் போட்டிகள் இடம்பெற்றன. இந்த போட்டிகளில் தனது சிறந்த குரல் வலத்தை வெளிக் காட்டி இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்பாடியர் சம்பத் ஶ்ரீ பலன்சூரிய முதலாவது இடத்தை பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டார்.
இவருக்கு ஜனாதிபதி அவர்களினால் 20 மில்லியன் ரூபாயில் நிர்மானிக்கப்பட்ட வீடொன்று பரிசாக வழங்கப்பட்டன. இந்த வீடு பௌத்த சமய தேரர்களின் ஆசிர்வாத்துடன் சமய சம்பிரதாய முறைப்படி வழங்கப்பட்டன.
இந்த நிகழ்விற்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும், பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள் பங்கேற்றுக் கொண்டனர். Best Authentic Sneakers | Asics Onitsuka Tiger