09th July 2018 10:52:29 Hours
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினரால் புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட கண்காட்சிகள் (6) ஆம் திகதி வெ ள்ளிக் கிழமை பனாகொடை மேற்கு பாதுகாப்பு தலைமையக வளாகத்தினுள் இடம்பெற்றன.
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது அறிவுறுத்தலுக்கமைய இந்த கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டன.
இந்த கண்காட்சி நிகழ்ச்சியில் 21 புதிய கண்டுபிடிப்பு பொருட்கள் முன் வைக்கப்பட்டன . மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்து மங்கள விளக்குகளை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
கண்காட்சியில் இராணுவத்தினரால் முன் வைக்கப்பட்ட பொருட்கள் தொழில்நுட்ப ரீதியாக தயாரிக்கப்பட்ட பொருட்களாகும்.
இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு திட்டம் மற்றும் வளர்ச்சி பணியகத்தின் பிரதி பணிப்பாளர் பிரிகேடியர் டீ.ஆர். தர்மசிரி, தொழில்நுட்ப மற்றும் கண்டுபிடிப்பு ஆதரவு மையத்தின் செயலாளர் காரியாலயத்தின் ஒருங்கினைப்பு அதிகாரி ரஞ்சன் ஜோசப் ,தொழில் நுட்ப கல்லூரியின் அதிகாரியான ஏ.ஏ.எம்.டி அதிகாரி போன்ற நடுவர்களின் தீர்ப்பின் படி இந்த கண்காட்சியில் சிறந்த கண்டு பிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சிறந்த கண்டு பிடிப்பாளர்களின் பெயர்கள் கீழ்வருமாறு;
முதலாவது இடம் – பொலிதீன் அச்சு இயந்திரம், இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த பதவி நிலைச் சாஜன் எச்.பி.எஸ் மஹாநாம
இரண்டாவது இடம் – இயந்திரத்தினால் முட்டை பாதுகாத்தல், . இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த கோப்ரல் கே.கே.எம் புஸ்பகுமார
மூன்றாவது இடம் – இயந்திரத்தின் மூலம் பாவனை செய்யும் புளுடூத், இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த போர் வீரன் ஜி.ஆர்.எஸ்.எம்.பீ செனவிரத்ன
நான்காவது இடம் – மின்சாரத்தில் இயங்காத தண்ணீர் இயந்திரம், கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் டப்ள்யூ.எம்.பி.பீ விக்ரமசிங்க
ஜந்தாவது இடம் - உயர் பாதுகாப்பு முகப்பு பயண்பாடு, இராணுவ சேவை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எஸ்.டீ.எஸ் சுகந்தNike air jordan Sneakers | Marki