Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th June 2018 14:00:52 Hours

இராணுவத்தினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12, 121 ஆவது படைத் தலைமையகத்தின் தலைமையில் கொழும்பு ரொட்டரி கழகத்தின் அனுசரனையில் மொனராகலை, மெதகம, படல்கும்புர, சியம்பலான்டுவ, வெல்லவாய மற்றும் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த 220 பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இந்த நன்கொடைகள் மே மாதம் 21 – 23 ஆம் திகதிகளில் மெதகம தேசிய கல்லூரி வளாகம் மற்றும் மொனராகல ரோயல் கல்லூரி மைதானத்தில் வழங்கப்பட்டன.

இந்த நன்கொடைகள் 5 ஆம் ஆண்டு மற்றும் சாதாரண உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 12 படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த வன்னியாரச்சி அவர்கள் வருகை தந்து இந்த பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடைகளை வழங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்வில் ஓய்வுபெற்ற அதிபர் கமல் பண்டார, கொழும்பு ரொட்டரிக் கழகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஏ. ஆர் ரத்னாயக, 121 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் நலின் கொஸ்வத்த அவர்கள் கலந்து கொண்டனர்.

Best jordan Sneakers | Air Jordan 1 Retro High OG University Blue - Gov