16th March 2018 11:38:38 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஐந்தாவது வருடாந்த நிகழ்வு மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது தலைமையில் மார்ச் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை இடம்பெற்றன.
வருடாந்த நிகழ்வையிட்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி கண்டி தலதா மாளிகையில் விஷேட பூஜை ஆசிர்வாத வழிபாடுகள் இராணுவத்தினரது பங்களிப்புடன் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து விஷேட இந்து வழிபாடு பூஜைகள் 13 ஆம் திகதி கதிர்காமத்தில் இடம்பெற்றன.
பதினாறாம் திகதி மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி தேசிய பாதுகாப்பு படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் இடம்பெற்றன. அதனை தொடர்ந்து படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.
பின்பு படைத் தளபதியினால் இராணுவத்தினர் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டு படைத் தளபதி இராணுவத்தினருடன் மதிய போசன விருந்தில் கலந்து கொண்டார்.
Running sport media | adidas Yeezy Boost 350