04th January 2018 09:02:55 Hours
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 51 ஆவது படைப் பிரிவின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன இராணுவ சம்பிரதாயபூர்வமாக (03) ஆம் திகதி புதன் கிழமை காலை தனது பதவியை பொறுப்பேற்றார்.
படைத் தளபதிக்கு தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பௌத்த மத ஆசிர்வாத வழிபாடுகளின் பின்பு தனது தலைமையக பணிமனையில் வைத்து உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவிகளை பொறுப்பேற்றார்.
பின்பு படைத் தளபதியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தலைமையகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசார நிகழ்விலும் பங்கேற்று கொண்டார்.
அதனை தொடர்ந்து யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தார்.
Sports Shoes | Air Jordan Release Dates Calendar