02nd January 2018 18:21:22 Hours
கிளிநொச்சிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் மல்லாவியிலுள்ள 65ஆவது படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட எல்லே மற்றும் கயிறிழுத்தல் விளையாட்டு போட்டிகள் இப் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.
அந்த வகையில் இவ் எல்லே போட்டி நிகழ்வுகள் 651ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் ரஞ்சித் அபேசிங்க அவர்களின் கண்காணிப்பின் கீழ் 15ஆவது (தொண்டர்) சிங்கப் படையினரால் (SLSR) ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
இவ் எல்லே போட்டிகளில் 19ஆவது இலங்கை காலாட் படையணி மற்றும் 11ஆவது கஜபா கலாட் படையணி போன்றன இறுதிச் சுற்றில் போட்டியிட்டதுடன் 19ஆவது இலங்கை காலாட் படையணி வெற்றியீட்டியது.
இதனையொட்டி 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் கயிறிழுத்தல் போட்டிகள் இடம் பெற்றன.
அந்த வகையில் இக் கயிறிழுத்தல் போட்டிகள் 652ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் லங்கேஷ்வர மஹிங்கந்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் 7ஆவது (தொண்டர்) இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினால் ஒழுங்கு செய்யப்பட்டு இடம் பெற்றது.
10ஆவது இலங்கை காலாட் படையணி மற்றும் 15ஆவது (தொண்டர்) சிங்கப் படையணி போன்றன இறுதிச் சுற்றில் போட்டியிட்டதுடன் 10ஆவது இலங்கை காலாட் படையணி வெற்றியீட்டியது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 65ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்கள் கலந்து கொண்டார்.
அத்துடன் கட்டளை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் படையினர்களும் கலந்து கொண்டார்கள்.
buy footwear | Nike