30th April 2024 20:08:06 Hours
கிளிநொச்சி பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சிவில் அமைப்புகளுடன் இணைந்து 55 வது காலாட் படைப்பிரிவின் 551 வது காலாட் பிரிகேட் படையினர் கிளிநொச்சி நகரின் தூய்மை மற்றும் அழகினை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்த சிரமதான பணியை மேற்கொண்டனர்.
இதன்படி, ஏ9 வீதியும் நகரப் பகுதியும் 551 வது காலாட் பிரிகேட் படையினரால் சுத்தம் செய்யப்பட்டு, முக்கிய பொது இடங்களின் தூய்மையை மேம்படுத்தி, குடியிருப்பாளர்களுக்கு சுத்தமான சூழலை உருவாக்கினர்.
551வது காலாட் பிரிகேட் படையினர் நடாத்திய சிரமதானப் பணிக்கு உள்ளூர்வாசிகள் தங்கள் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.