Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2024 16:57:53 Hours

24 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சீ பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 2024 ஏப்ரல் 25 ஆம் திகதி மத சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

வருகை தந்த புதிய படைப்பிரிவு தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பின்னர் அவர் குழு படம் எடுத்துக் கொண்டதுடன், 24 வது காலாட் படைப்பிரிவு வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

24 வது காலாட் படைப்பிரிவு தளபதி தனது படையினருக்கான உரையின் போது தொழில்முறை, நேர்மை மற்றும் செயல்பாட்டு சிறப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். பின்னர் அனைத்து நிலையினருக்குமான தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.

மேலும், 24 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி தீகவாப்பிய தூபி மறுசீரமைப்பு திட்டத்தையும் பார்வையிட்டார்.

படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.