Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2024 14:46:38 Hours

213 வது காலாட் பிரிகேட்டினர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாட்ட ஒழுங்கமைப்பு

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 213 வது காலாட் பிரிகேட்டினர் பிரதேச செயலகம் மற்றும் உள்ளூர் வர்த்தக சமூகத்துடன் இணைந்து, 2024 ஏப்ரல் 20 ஆம் திகதி பொழுதுபோக்குடனான பாரம்பரிய கிராமிய விளையாட்டுகளுடன் மதவாச்சி பொது விளையாட்டரங்கில் புத்தாண்டு நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த கொண்டாட்டமானது 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ், பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 213 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பீஎம் டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் இடம்பெற்றது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் புத்தாண்டு கொண்டாட்டங்களின் உணர்வைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் மதவாச்சி பிரதேச செயலாளர், வர்த்தகர்கள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.