Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th April 2024 17:50:44 Hours

இலேசாயுத காலாட் படையணியினால் மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களுக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களுக்கு 2024 ஏப்ரல் 22 ஆம் திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரியின் இலங்கை இராணுவத்திற்கான அர்ப்பணிப்புமிக்க சேவையை கௌரவிக்கும் வகையில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். பின்னர், மேஜர் ஜெனரல் எம்.டி.கே.ஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீரமரணமடைந்த போர்வீரர்களின் நினைவாக ‘போர் மாவீரர்’ நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தியதுடன், இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் சேவையாற்றும் அனைத்து நிலையினருக்கும் அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.

பின்னர், இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய அதிகாரிகள் உணவகத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.