22nd April 2024 13:46:20 Hours
ஐ.நா மாலியில் உள்ள இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவின் தளபதி கேணல் டப்ளியு.டப்ளியு.என்.பீ விக்ரமாராச்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஏப்ரல் 13 அன்று மாலியில் உள்ள காவோ சூப்பர் கேம்ப் வளாகத்தில் இலங்கை பாதுகாப்புப் படையின் படையினர் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடினர்.
இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவின் தளபதி பல அழைப்பாளர்களுடன் மங்கல விளக்கு ஏற்றிய பின்னர் விழா ஆரம்பமாகியது. சருக்கு மரம் ஏறுதல், தலையணைச் சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், யானைக்கு கண் வைத்தல், இசை நாற்காலிகள், பலூன் நடனம் போன்ற பல பாரம்பரிய மற்றும் கலாசார நிகழ்வுகளும் விளையாட்டுக்களும் இதன் போது இடம்பெற்றன.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் குழுத் தளபதி உரையாற்றினார். மகிழ்ச்சியான மற்றும் வளமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நிகழ்வின் முடிவில் அனைவரின் பங்களிப்பையும் பாராட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள், மாலி ஆயுதப்படை பிரதிநிதிகள் மற்றும் இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழுவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.