16th April 2024 17:18:35 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய பாதுகாப்பு படை தலைமையகம் 12 ஏப்ரல் 2024 அன்று மத்திய பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டைக் கொண்டாடியது.
மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகியதுடன் மரதன் ஓட்டம் சறுக்கு மரம் ஏறுதல், தலையணை சண்டை, கயிறு இழுத்தல், வினோத உடை போட்டி, போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன.
இவ்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.