Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th April 2024 15:01:34 Hours

முதலாம் படையினால் சகிப்புத்தன்மை விருத்தி போட்டி

முதலாம் படை தலைமையகத்தில் 07 ஏப்ரல் 2024 அன்று சகிப்புத்தன்மை விருத்தி போட்டி வெற்றிகரமாக முடிந்தது. இந்த போட்டியின் நோக்கம் 53 மற்றும் 58 வது காலாட் படைப்பிரிவுகளின் கீழ் பணியாற்றும் வீரர்களின் உடற்பயிற்சி, சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை மற்றும் குழு உணர்வை மேம்படுத்துவதாகும்.

இப்போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு தங்களது உடல் சுறுசுறுப்பு மற்றும் உடற்தகுதியை வெளிப்படுத்தினர். அவர்களில், 5 வது விஜயபாகு காலாட் படையணி சிறப்பான திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தி சம்பியனானது. தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை 19 வது இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 வது கெமுணு ஹேவா படையணி பெற்றுக்கொண்டன.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.