10th April 2024 11:30:59 Hours
61 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.ஏ.ஜே.என். ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் 07 ஏப்ரல் 2024 அன்று 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியிக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த படைப்பிரிவின் தளபதி கட்டளை அதிகாரியால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், கட்டளை அதிகாரி 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் இன் செயல்பாடுகள் பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.
அன்றைய தினத்தற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில், படையலகு ஊழியர்களுடன் சில குழு படங்களை எடுத்துக் கொண்ட அவர், பின்னர் மரக்கன்று நடுதல், படையினருக்கான உரை, அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து என்பவற்றிலும் கலந்துக் கொண்டார்.
பின்னர், வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டதுடன் இறுதியாக, படைப்பிரிவு தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.
முகாம் வளாக ஆய்வுடன் விஜயம் நிறைவிற்கு வந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.