10th April 2024 11:00:59 Hours
14 வது காலாட் படைப்பிரிவு தனது 13 வது ஆண்டு நிறைவை 2024 ஏப்ரல் 06 அன்று பெருமையுடன் கொண்டாடியது. இதன் போது 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ச்சியான நிகழ்வுகள் இடம் பெற்றன.
ஆண்டு நிறைவு நிகழ்வில் படைப்பிரிவின் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து 6 வது இலங்கை பீரங்கி படையணியினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.
பின்னர், படைப்பிரிவு தளபதி குழு புகைப்படம் எடுத்தல், அனைத்து நிலையினருக்கான தேநீர். விருந்து ஆகியவற்றில் கலந்துக் கொண்டார். அன்றைய நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக வளாகத்தில் ஒரு இசை நிகழ்ச்சியுடன் அனைத்து நிலையினருக்கான இராபோசணம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.