10th April 2024 12:00:59 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பீட்டர் வீரசேகர சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் 35 சிறார்களுக்கு 6 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் 2024 ஏப்ரல் 08 ம் திகதி சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 141 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஆர்.ஆர்.டி.எஸ் தர்மவிக்ரம ஆர்எஸ்பீ அவர்கள் கலந்துக் கொண்டார். அத்துடன் சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு 6 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜீஆர்ஆரகேஎஸ் ஜயரத்ன ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.