10th April 2024 12:41:59 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்கள் 2 வது மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணிக்கு 2024 ஏப்ரல் 05 ம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
2 வது, மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரிகள் படையினர்களுடன் இணைந்து அந்தந்த படையலகிற்கு வருகை தந்த இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியை நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து கேட்போர் கூடத்தில் 2 வது, மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினருக்கு உரையாற்றிய பிரதி தளபதி படையணியின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். மேலும், பிரதி தளபதி உரையாற்றுகையில் படையலகுகளின் முன்னேற்றத்திற்கு ஒரு குழுவாகச் செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். படையலகுகளை உயர்தரத்தில் நிலைநிறுத்துவதில் அவர்கள் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்திற்காக அனைத்துப் படையினருக்கும் நன்றி தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ விஜயத்தின் நிறைவுக்கு முன் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்ததுடன், விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளையும் பதிவிட்டார்.
இவ் விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உடனிருந்தனர்.