08th April 2024 13:39:16 Hours
மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலத்துங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 04 ஏப்ரல் 2024 அன்று, இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் 3 வது படைத் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள படைத் தளபதி படையணி நிலையத் தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் பின்னர் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் புதிய படைத் தளபதிக்கு படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை குறிக்கும் ஆவணத்தில் மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலத்துங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டார். அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில், சிரேஸ்ட அதிகாரி படையணி பணியாளர்களுடன் சில குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன் வளாகத்தில் மாங் கன்று ஒன்றையும் நாட்டினார்.
மேலும், மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலத்துங்க ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் தனது பணியின் நோக்கம் மற்றும் கடமைகளை எடுத்துரைக்கும் வகையில் அதிகாரிகளுக்கு உரையாற்றினார். மேலும் படையணியின் நல்விம்பத்தை பாதுகாக்க ஒரு குழுவாக பணியாற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இந்த உரையானது படையணியின் வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பையும் அவரது புதிய நியமனத்தின் பொறுப்புகளுக்கான அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டியது.
அன்றைய விழாவின் முடிவில், படைத் தளபதி அனைத்து நிலையினருடனான மதிய உணவில் பங்கேற்று, கலந்து கொண்டவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.