Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th April 2024 13:49:58 Hours

மேலும் ஒரு தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீட்டிற்கு அடிக்கல் நாட்டல்

கிராலகொல்ல, மாளிகாதென்ன பிரதேசத்தில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 06 ஏப்ரல் 2024 அன்று இடம்பெற்றது.

111 வது காலாட் பிரிகேட் தளபதி அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் மேற்கொள்ளும் கட்டுமான பணிக்கு அப்பகுதி கிராமவாசிகள் மற்றும் வணிகர்கள் நிதியுதவி வழங்கினர்.

4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் பீகே வருவான் கொடகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களினால் இவ்வீட்டிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இவ்விழாவின் போது 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் ,சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.