Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2024 19:17:55 Hours

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து கஜபா படையணியில் ஆராய்வு

கஜபா படையணி தலைமையகத்தில் 1000 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் உறவினர்களின் பங்கேற்புடன் 2024 ஏப்ரல் 06 ஆம் திகதி வன்னி பாதுகாப்புப் படை தலைமையக படையினர் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். அவர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை நிவர்த்தி செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக காணப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகம், இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகம், ஆளனி நிர்வாக பணிப்பகம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் இராணுவ வைத்திய சேவை பணிப்பகம் ஆகிய இராணுவ தலைமையகத்தின் ஏழு பணிப்பகங்கள் போர் வீரர்கள் தங்கள் பிரச்சினைகளை தெரிவிக்கவும் அவர்களின் விடயங்களுக்கு உதவும் பொருட்டு பிரசன்னமாகி இருந்தனர்.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் வருகை தந்த பிரதம அதிதியை வரவேற்றதுடன், இராணுவ நலன்புரி மற்றும் புனர்வாழ்வு செயல்முறைகள் பற்றிய சிறு ஆவணப்படம் பங்கேற்பாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. மேலும் இராணுவ கீதம் இசைக்கப்பட்டதுடன், உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹெவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தியதுடன், அன்றைய பிரதம விருந்தினர் பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றினார்.

தனது உரையின் போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், அவர்கள் நாட்டிற்கு ஆற்றிய சேவைக்காகக் கூடியிருந்தவர்களை பாராட்டினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் நலத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் குறித்து விளக்கினார். பின்னர், பங்கேற்பாளர்களுக்கு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பும் வழங்கப்பட்டது.

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.யு.எம்.என். மானகே (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள் போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.