Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th April 2024 15:42:21 Hours

11 வது இலங்கை சிங்க படையணி படையினரால் வெளிச்செல்லும் படைப்பிரிவு தளபதிக்கு பிரியாவிடை

11வது இலங்கை சிங்க படையணி படையினர் வெளிச்செல்லும் 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களுக்கு 2024 ஏப்ரல் 24 ஆம் திகதி பிரியாவிடை வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய 11வது இலங்கை சிங்க படையணி படையினர் வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, 11வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டி.எம்.என் பத்மசிறி அவர்கள் வெளிச்செல்லும் தளபதியை நுழைவாயிலில் அன்புடன் வரவேற்றார்.

இந்நிகழ்வின் நினைவுச்சின்னமாக சிரேஷ்ட அதிகாரி படையலகு பணியாளர்களுடன் பல படங்கள் எடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, வெளிச்செல்லும் தளபதி படையினருக்கு உரையாற்றினார், மேலும் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரமும் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது 243 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.