Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2024 14:25:02 Hours

வான் தாக்குதல் பாடநெறி - 28 எயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் நிறைவு

வான் தாக்குதல் பாடநெறி இல-28 இன் நிறைவின் விடுகை அணிவகுப்பு நிகவெவ எயர் மொபைல் பயிற்சி பாடசாலையில் 01 ஏப்ரல் 2024 அன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் எயர் மொபைல் பயிற்சி பாடசாலையின் தளபதியின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார். இப் பாடநெறியில் 5 அதிகாரிகள் மற்றும் 90 சிப்பாய்களுடன் மொத்தம் 95 பேர் பயிற்சியை நிறைவு செய்தனர்.

பின்வரும் சாதனையாளர்களுக்கு பிரதம அதிதி சான்றிதழ்களை வழங்கினார்.

சிறந்த மாணவர் மற்றும் சிறந்த துப்பாக்கி சூட்டு வீரர் - கஜபா படையணியின் கெப்டன் பீ.எப்.ஏ.எல் பொன்சேக்கா.

சிறந்த உடல் தகுதி மாணவர் - கெமுனு ஹேவா படையணியின் கோப்ரல் யூ.ஈ சில்வா

53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் பங்கேற்கின்றனர்.