05th April 2024 14:05:29 Hours
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் தொடர்பாடல் பிரிவில் கடமையாற்றும் 18 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 3 ஆம் கட்ட உயர் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறி 04 ஏப்ரல் 2024 அன்று வெற்றிகரமாக நிறைவுற்றது. இராணுவத் தலைமையகத்தின் வழிகாட்டுதல் மற்றும் பிரதம சமிக்ஞை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்ற பாடநெறி, நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களில் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தொடர்பாடல் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.