04th April 2024 12:03:35 Hours
22 வது காலாட்படை பிரிவின் படையினர் 2023 ஏப்ரல் 01 அன்று 22 காலாட் படைபிரிவு தலைமையகத்தில் முன்னாள் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கினர்.
இராணுவ மரபுகளுக்கு இணங்க, அவர் 22 வது காலாட் படைபிரிவுக்கு வருகை தந்தவுடன் பாதுகாவலர் அறிக்கையில் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்பீ அவர்களால் அன்புடன் வரவேற்கப்பட்டார். அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில் சிரேஸ்ட அதிகாரி ஊழியர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, தளபதி படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துக் கொண்டார்.
அதன்பிறகு, தளபதி புதுப்பிக்கப்பட்ட சிப்பாய்களுக்கான லகூன் விவ் விடுமுறை விடுதியை திறந்து வைத்தார். பின்னர் 22 வது காலாட் படைபிரிவின் கட்டளை படையலகுகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். மேலும், 20 வது கஜபா படையினரால் பரணமதவச்சி ஏழைக் குடும்பத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவி பயனாளிகளிடம் கையளித்தார்.
பின்னர், பிரியாவிடை விருந்துபசாரம் வழங்கப்பட்டதுடன் வெளியேறும் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை பதிவிட்டார்.
22 வது காலாட் படைபிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.