04th April 2024 12:55:33 Hours
பொறியியல் சேவைகள் படையணி படைத் தளபதியும் நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 27 மார்ச் 2024 3 வது பொறியியல் சேவைகள் படையணிக்கு விஜயம் செய்தார்.
வருகை தந்த படைத் தளபதியை கட்டளை அதிகாரி அன்புடன் வரவேற்றதுடன் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், கட்டளை அதிகாரி, படையலகின் வகிபங்கு, பணிகள், பொறுப்புகள் மற்றும் சமீபத்திய சாதனைகளை தொடர்பில் விளக்கமளித்தார். அன்றைய தினத்திற்கு நினைவுகளைச் சேர்க்கும் வகையில், சிரேஸ்ட அதிகாரி படையலகு ஊழியர்களுடன் குழு படங்கள் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து மரக்கன்று நாட்டல் படையினருக்கான உரை மற்றும் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்து என்பவற்றிலும் கலந்துக் கொண்டார்.
பின்னர், முகாம் வளாகத்தை சுற்றி பார்வையிட்ட அவர், படையலகின் திறன்களை நேரடியாக அறிந்து கொண்டார். அத்துடன், விளைத்திறன் மற்றும் வினைத் திறனை மேலும் மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களை வழங்கினார்
அவர் புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.