04th April 2024 12:50:42 Hours
14 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2024 மார்ச் 26 முதல் 2024 ஏப்ரல் 02 வரை நடைபெற்ற ‘காலாட் படைப்பிரிவு தளபதி சவால் கின்ன மென்பந்து கிரிக்கெட் போட்டி -2024’. இல் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 16 அணிகள் கலந்து கொண்டன.
14 பூர்வாங்க போட்டிகளின் பின்னர், 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணியும் 18 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 14 வது காலாட் படைபிரிவின் தளபதி அவர்கள் கலந்து சிறப்பித்தார். கந்தலந்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அணி சம்பியனாகியது.
14 ஆவது காலாட் படைபிரிவின் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் போட்டியினை கண்டு ரசித்தனர். அங்கம்பொர மற்றும் ஏனைய பொழுதுபோக்கு நிகழ்வுகளால் போட்டி வண்ணமயமாகியது.