04th April 2024 11:50:18 Hours
ஆசிய சம்மேளன ஹொக்கி போட்டியிலும் தெற்காசிய கபடி போட்டியிலும் இலங்கை இராணுவ வீரர்களின் விளையாட்டு சாதனைகளை அங்கீகரிப்பதற்காக, 26 மார்ச் 2024 அன்று இராணுவ பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் பண ஊக்குவிப்புகள் வழங்கப்பட்டன.
கோப்ரல் டி.எம்.ஐ.கே ஜயசுந்தர மற்றும் லான்ஸ் கோப்ரல் ஏ.பீ சஞ்ஜீவ ஆகியோர் 2022ம் ஆண்டிற்கான ஆசிய ஹொக்கி விளையாட்டு போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றதற்காக பண ஊக்குவிப்பு வழங்கப்பட்டது. அத்துடன் லான்ஸ் கோப்ரல் கே.டி.எம்.பீ குமார 2022ம் ஆண்டிற்கான ஆசிய விளையாட்டு கபடி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக பண ஊக்குவிப்பை பெற்றார். இந்த விருதுகளை நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இராணுவ பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வழங்கினர்.
இந் நிகழ்வில் நிலைய தளபதி , சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.