03rd April 2024 13:48:06 Hours
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் உள்ள 14 வது இலங்கை பாதுகாப்புப் படைக் குழு, லெபனான் ஐ.நா. அமைதி காக்கும் பணிக் காலத்தின் நிறைவின் பின்னர் 2024 ஏப்ரல் 02 ஆம் திகதி நாடு திரும்பியது. இலங்கை பாதுகாப்பு படைக் குழுவின் கட்டளை அதிகாரி கேணல் டி.பீ.ஐ.டி களுஅக்கல அவர்களின் தலைமையில் 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்கள் கொண்ட குழு 02 மார்ச் 2023 அன்று லெபனானுக்கு சென்றிருந்தது.
இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பி.கே.ஜி.எம்.எல். ரொட்ரிகோ, அப்படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் கேஏடிஎன்ஆர் கன்னங்கர, வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் வெளிநாட்டு நடவடிக்கைகள் கேணல் பீ.பீ.சி பெரேரா, பல அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் வருகை தந்தவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர்.