Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2024 09:59:58 Hours

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் 56வது காலாட் படைப்பிரிவு இணைந்து இலவச கண்புரை சத்திரசிகிச்சை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கஸ்ட பிரதேசங்களில் நடாத்தப்பட்ட மருத்துவ முகாம்களின் போது இனங்காணப்பட்ட நோயாளர்களுக்காக 2024 மார்ச் 26 அன்று 56 வது காலாட் படைப்பிரிவினால் யாழ். போதனா வைத்தியசாலையில் விசேட சத்திர சிகிச்சைத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை கண் பிரிவு வைத்தியர் மலரவன், வைத்தியர் திலீபன் மற்றும் பணியாளர்கள் இராணுவத் தள வைத்தியசாலை பலாலியுடன் இணைந்து 87 நோயாளர்களுக்கு கண்புரை சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டனர். மேலும், யாழ்ப் பகுதியைச் சேர்ந்த 28 நோயாளர்களும் சத்திரசிகிச்சைத் திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதிமேஜர் ஜெனரல் எஸ்.கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை கண் பிரிவுக்கு நேரில் சென்று திட்டத்தை மேற்பார்வையிட்டார்.